குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே, தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் ஏதேனும் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருப்பதால், அதுபோன்ற நபர்களை தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகளை வலுத்து வந்த நிலையில், பலமுறை நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்நிலையில், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்துதல் குறித்து புதிய நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, குற்றப்பின்னணி குறித்த விவரங்களை அந்தந்த வேட்பாளர், கட்சிகள் 3 முறை செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பிறகு குற்றப் பின்னணி விவரங்களை வேட்பாளர் மற்றும் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் 4 நாட்களுக்கு முன்பு ஒரு முறையும், 5 மற்றும் 8 ஆவது நாட்களுக்குள் 2 ஆவது முறையும், வாக்குப் பதிவுக்கு 2 நாள் முன்னதாக 3 ஆவது முறையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற வழக்குகள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடமும், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை முறையாக வேட்பாளர்கள் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எந்த பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் குற்றப் பின்னணியை 48 மணி நேரத்திற்குள் இணையத் தளத்தில் வெளியிட வேண்டும் என்பதே விதியாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

14 minutes ago

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

46 minutes ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

1 hour ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

2 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

3 hours ago

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

4 hours ago