நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட நேரடி தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள் போன்ற நபர்களிடம் இத்தைகையை நோய் எதிர்ப்பு திறன் தானாகவே உருவாகி இருக்கலாம் என்பதாலும் அவற்றை சோதனை செய்யும் பட்சத்தில் வைரஸ் பரவலை தடுக்க புதிய வழிமுறைகளை கண்டறியலாம் என்பதற்காகவும் இத்தகையை பரிசோதனைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நோய் எதிர்ப்பு பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தாலும், தயக்கம் இருந்தாலும் ஐசிஎம்ஆர்யை அணுகலாம் என்று தெரிவித்துள்ளது. அதற்காக அனைத்து உதவிகளும் வழங்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சார்ஸ் நோய் ஏற்பட்டபோது இத்தகையை நோய் எதிர்ப்பு திறன் பரிசோதனை முறை கையாளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…