கோயில் அஸ்திவார பூஜைக்காக 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர், நெய் ஊற்றி வழிபாடு செய்த பக்தர்கள்!

Published by
Rebekal

ராஜஸ்தான் மாநிலத்தில் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணியின்போது நடைபெற்ற பூஜைக்காக தோண்டப்பட்ட குழியில் பக்தர்கள் 11 ஆயிரம் லிட்டர் பால் தயிர் மற்றும் நெய் ஊற்றி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவர் மாவட்டத்தில் தேவநாராயணன் என்னும் கோவில் ஒன்று ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது. எனவே அந்த கோயில் கட்டுமான அடிக்கல் நாட்டும் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த அஸ்திவார பூஜையின்போது தோண்டப்பட்ட குழியில் 11 ஆயிரம் லிட்டர் பால், தயிர் மற்றும் நெய் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள கோவில் கட்டுமான செய்தி தொடர்பாளர் ரம்லால், 11 ஆயிரம் லிட்டர் பால், நெய், தயிர் ஆகியவற்றை தங்கள் தேவநாராயணன் கோயிலின் அஸ்திவாரம் விழாவிற்காக குஜ்ஜார் சமூக உறுப்பினர்கள் மற்றும் பிறரிடமிருந்து சேகரித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், தாராளமாக பக்தர்கள் பால், தயிர் ஆகியவற்றை வழங்கியதாகவும் கூறியுள்ளார். மேலும் வழிபாடு நடத்த செலவழிக்கப்பட்ட 11,000 லிட்டரில் 1500 லிட்டர் தயிர், மற்றும் ஒரு குவிண்டால் நெய் இருந்ததாகவும், இதற்கான மொத்த செலவு கிட்டத்தட்ட 1.50 லட்சம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி வாசிகள் கூறுகையில், இதுபோன்ற விழாக்களுக்கு பால் ஊற்றுவது குஜ்ஜார் சமூகத்தின் கட்டாயமான வழக்கம் கிடையாது எனவும், கடவுள் நமக்கு கொடுப்பதை ஒப்பிடுகையில் இது ஒன்றும் பெரிது இல்லை. இதன் மூலம் நமது கால்நடைகள் பாதுகாக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

Published by
Rebekal

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

10 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

10 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

12 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago