Categories: இந்தியா

2019 தேர்தலில் அதிகப்படியான பணத்தை காங்கிரஸ் பயன்படுத்தியதா? வெளியான பரபரப்பு தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

Congress: கடந்த 2019 தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி அதிகப்படியான பணத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை நெருங்கும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என வருமானவரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு முன்பு வரி கணக்கை தாமதமாக செலுத்தியதாக காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், அபராதமும் விதிக்கப்பட்டது.

தற்போது, காங்கிரஸிடம் சுமார் ரூ.1,823 கோடி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 2017-18 முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி முறையாக தாக்கல் வருமான வரிக் கணக்கை செய்யவில்லை என்றும் வட்டியுடன் வரி மற்றும் அபராதம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2019 மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அதிகப்படியான பணத்தை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஏப்ரலில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அதிகப்படியான பணத்தைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

2013-14 முதல் 2019-20 வரையிலான நிதியாண்டுகளுக்கான மறுமதிப்பீட்டு நடவடிக்கைகளை முடிக்கக் கோரிய வருமான வரித்துறைக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையின்போது, வருமான வரித்துறை தாக்கல் செய்த “satisfaction note”-இல் பல தேர்தல்களின் போது பல பண பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்கள் பட்டியலிட்டுள்ளது.

அதில், கடந்த மக்களவை தேர்தலில் அதிக பணம் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ரூ.520 கோடி பணம் மதிப்பீட்டில் இருந்து தப்பியிருக்கலாம் என்றும் வருமான வரித்துறையிடம் கணிசமான ஆதாரங்கள் இருப்பதாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியதாகவும் கூறப்படுகிறது. மேலும், வருமான வரித்துறையிடம் உள்ள அனைத்து ஆதாரங்களும் காங்கிரஸிடம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recent Posts

சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

5 hours ago

எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் மொழி இருக்கும் – கமல்ஹாசன்!

நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கிரேஸி மோகன் எழுதிய '25 புத்தகங்கள்' வெளியீட்டு விழாவில் இன்று…

6 hours ago

அதிரடியில் அலறவிட்ட மும்பை…திணறிய ராஜஸ்தான்! டார்கெட் இது தான்!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில்…

7 hours ago

தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள் – அமித்ஷா ஆதங்கம்!

டெல்லி : ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

8 hours ago

கட்டிடம் கட்டியாச்சு..அடுத்து திருமணம் தான்..நடிகர் விஷால் மகிழ்ச்சி!

சென்னை : பல்வேறு சிக்கல்களைக் கடந்து, கடந்த 2019ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகள் தொடங்கிய நிலையில்…

8 hours ago

“நீ சிங்கம் தான்” விராட் கோலிக்கு STR-ன் ‘அன்பு’ பதிவு!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி.…

11 hours ago