சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம் மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஒரு அரிய மலேரியா இனம் பதிவாகியுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சூடானில் இருந்து திரும்பிய ஒரு சிப்பாயிடம் மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே கண்டறியப்பட்டது. இந்த சிப்பாய் தற்போது கண்ணூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.
பிளாஸ்மோடியம் ஓவலே என்பது மனிதர்களை பாதிக்கும் நான்கு வகையான மலேரியாக்களில் ஒன்று. இது முதன்மையானது. ஆப்பிரிக்க பகுதிகளில் இது அதிகமாக காணப்படுகிறது. ஆனால், மேற்கு பசிபிக், பிலிப்பைன்ஸ் மற்றும் நியூகினியா தீவுகளில் இது பதிவாகி உள்ளது. இது ஒரு ஆபத்தான மலேரியா இனமாகும்.
மலேரியாவின் புதிய இனமான பிளாஸ்மோடியம் ஓவலே மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சூடானில் இருந்து வந்தா சிப்பாயிடம் இது கண்டறியப்பட்டுள்ளது. கண்ணூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சரியான நேரத்தில் சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய் பரவுவதை தவிர்க்கலாம் என, மாநில சுகாதார அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…