Categories: இந்தியா

தேர்தலில் நிற்க சீட் இல்லை… அதிருப்தியில் விஷம் குடித்த காங்கிரஸ் பிரமுகர்.!

Published by
மணிகண்டன்

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒரே கட்டமாக 119 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் வேலைகளை ஆளும் பிஆர்எஸ் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட இதர கட்சியில் தீவிரமாக ஆரம்பித்து உள்ளன.

கடந்த இரண்டு முறை எதிர்க்கட்சியாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியானது இந்த முறை ஆட்சியை கைப்பற்ற கடுமையாக வேலை செய்து வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் வெளியிடபட்டு வருகிறது.

மிசோரமில் இந்த வாக்குச்சாவடிக்கு மீண்டும் வாக்குப்பதிவு..!

பான்ஸ்வாடா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே 2014 மற்றும் 2018 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர் பாலராஜு பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) தலைவரும் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகருமான போச்சரம் ஸ்ரீனிவாஸ் ரெட்டியிடம் தோல்வியடைந்தார். அவருக்கு இந்த முறை காங்கிரஸ் தலைமை சீட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக பாஜக பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்எல்ஏவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மனம் வருந்திய காங்கிரஸ் பிரமுகர் பாலாராஜு விஷம் அருந்தினார். தற்போது நிசாமாபாத் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

9 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

11 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

11 hours ago