DKShivakumar [Image Source : Jothimani]
அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி பேச போவதில்லை என டிகே சிவகுமார் பதில்.
யார் வேண்டுமானாலும் எதையாவது பேசட்டும், நான் அதை பற்றி பேசப் போவதில்லை என முதல்வர் பதவி பகிர்வு குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் பதிலளித்துள்ளார். முதல் 30 மாதம் சித்தராமையாவும், அடுத்த 30 மாதம் டிகே சிவகுமாரும் முதலமைச்சராக இருப்பார்கள் என தகவல் வெளியானது.
பதவி பகிர்வு என்ற திட்டப்படியே முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டைட் சிவகுமாரும் பதவி ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் கூறப்பட்டது. இந்த சமயத்தில், சித்தராமையா 5 ஆண்டுகள் கர்நாடக முதலமைச்சராக இருப்பார் என அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியதால் மேலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது, அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது குறித்து கேட்டதற்கு, அதைப்பற்றி பேச போவதில்லை என டிகே சிவகுமார் பதில் அளித்தார். மேலும், பதவி உள்ளிட்ட கட்சி பிரச்சனைகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கவனித்து கொள்ளும் என்றும் கர்நாடகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றுவதே தங்கள் முன்னுரிமை பணி எனவும் குறிப்பிட்டார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…