கிருமிநாசினி தெளிக்கப்பட்ட சுரங்கபாதைகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரானா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா கிருமி நாசினி தெளிக்கக்கூடிய சுரங்க பாதைகளின் பயன்பாட்டை தவிர்க்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் பஞ்சாப்பை சேர்ந்த குரு சிம்ரன் சிங் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கிருமி நாசினி தெளிக்க கூடிய சுரங்கத்தின் பயன்பாடு மருத்துவ ரீதியாகவும் மனோரீதியாகவும் தீங்கை விளைவிக்கும் என கூறியுள்ளார்.
மேலும் இதனை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது என வாதிட்டுள்ளார். இதனை ஏற்று நீதிபதிகள் தீங்கை விளைவிக்கும் என்றால் ஏன் அதை தடை செய்யவில்லை? என கேள்வி எழுப்பினர். மேலும் கிருமி நாசினி தெளிக்க கூடிய சுரங்கங்களின் பயன்பாட்டை தடுக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…