Categories: இந்தியா

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

Published by
கெளதம்

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.

அதாவது, மத்திய அரசின் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டத்தின் கீழ், சோலார் மின் உற்பத்திக்கு கடனுதவி வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, 3 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ.2 லட்சம், 3 KW முதல் 10 KW வரை சோலார் பேனல் அமைக்க ரூ.6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

MNRE/REC இணையதளத்தில் விண்ணப்பதாரர் பதிவு செய்வது முதல் கடன் வழங்குவது வரை, SBI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறியலாம். இந்த கடனுக்கு முதலில் https://www.pmsuryaghar.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து, அது நிறைவடைந்த பிறகு https://www.jansamarth.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வழங்கும் கடன் தொகை

  • 3 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை  சோலார் பேனலை அமைக்க ரூ.2,00,000 வழங்கப்படுகிறது.
  • 3 KW க்கும் அதிகமான மற்றும் 10 KW திறன் கொண்ட மேற்கூரை சோலார் பேனலை அமைக்க ரூ.6,00,000 வழங்கப்படுகிறது.

இந்த கடனுக்கு வட்டி விகிதம் என்ன?

  • ​​3 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை  சோலார் பேனல் நிறுவுவதற்கு (ரூ.2 லட்சம்) கடன் என்றால் 7% ஆகும்.
  • 3 KW-க்கு மேல் மற்றும் 10 KW வரை சோலார் மேற்கூரை பேனல் நிறுவுவதற்கு (ரூ.6 லட்சம்) கடன் என்றால் 10.15% ஆகும்.

விண்ணப்பிக்க தகுதி

  1. விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  2. சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு ஏற்ற கூரையுடன் கூடிய வீடு சொந்தமாக இருக்க வேண்டும்.
  3. வீட்டில் சரியான மின் இணைப்பு இருக்க வேண்டும்.
  4. சோலார் பேனல்களுக்கு குடும்பம் வேறு எந்த மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.
  5. கடன் தொகை பெருவதற்கு PAN எண் கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?

  • வங்கியின் இணையதளமான bank.sbiஐப் பார்வையிடுவதன் மூலம், கடன்களின் கீழ், தயவுசெய்து SBI சூர்யா கர் திட்டத்திற்குச் சென்று, இப்போதே விண்ணப்பிக்கவும்.
  • இல்லையெனில், நீங்கள் முதலில் https://pmsuryaghar.gov.in இல் விண்ணப்பிக்கலாம் பதிவு செய்யலாம், பின்னர் https://www.jansamarth.in இல் விண்ணப்பிக்கலாம்.
Published by
கெளதம்

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

21 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

46 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

1 hour ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago