PMAY 2024 [file image]
PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனும் வாங்கப்படுகிறது.
வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதில் 6.5% வரை வட்டியுடன் மானியம் பெறலாம், மேலும் நீங்கள் வாங்கும் கடனை 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.
இப்பொழுது இந்த திட்டத்திற்கு தேவையான அணைத்து விவரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து வீட்டுக் கடன் மானியத்தைப் பெறுவதற்கு 2024 டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க PMAY-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும்.
உள்ளே சென்றதும், நான்கு விருப்பங்கள் காட்டப்படலாம், உங்களுக்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். (ISSR) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், உங்கள் ஆதார் எண் மற்றும் பெயர் பின்வரும் பக்கத்தில் கேட்கப்படும் அதனை உறுதி செய்யவும்.
அப்போது வடிவம் A என தோன்றும். அதனை முழுமையாக நிரப்ப வேண்டும். ஒவ்வொரு ஒவ்வொன்றையும் கவனமாக படித்து நிரப்பவும். அனைத்தையும் முடித்த பிறகு கேப்ட்சாவை கொடுத்துவிட்டால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…