Categories: இந்தியா

வீடு கட்ட மானியமாக ரூ.1 லட்சம் வேண்டுமா? விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்…

Published by
கெளதம்

PMAY: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) என்பது ஏழை மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நலத் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்த திட்டத்தின் கீழ், இந்திய அரசு குடிசைப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு ஏதுவாக ஒரு வீட்டிற்கு ரூ.1 லட்சம் மானியமாக வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டுக் கடனும் வாங்கப்படுகிறது.

வறுமைக் கோட்டின் கீழ் இருக்கும் மக்களுக்கு வீடுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இதில் 6.5% வரை வட்டியுடன் மானியம் பெறலாம், மேலும் நீங்கள் வாங்கும் கடனை 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தலாம்.

இப்பொழுது இந்த திட்டத்திற்கு தேவையான அணைத்து விவரங்களும் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான தகுதி

  • உங்களுக்கு 18 வயதாகி இருக்க வேண்டும்.
  • உங்களுக்கு ஏதேனும் சொந்தமாக வீடு இருக்கக்கூடாது.
    இதற்கு முன் வீடு வாங்குவதற்கான ஆதாரங்களை ஏதெனும் ப்ரோக்கர்களிடம்  வழங்கியிருக்கக் கூடாது.
  • குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட நபராகவும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவாகவும், நடுத்தர வருவாய் கொண்டவராக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

  1. ஆதார் அட்டை
  2. வருமான சான்றிதழ்
  3. தொலைபேசி எண்
  4. தற்போதைய வசிக்குடியை வீட்டின் ஐடி
  5. பாஸ்போட் அளவு கொண்ட புகைப்படம்
  6. PM வங்கிக் கணக்கின் விவரம்

இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து வீட்டுக் கடன் மானியத்தைப் பெறுவதற்கு 2024 டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க PMAY-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmaymis.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கவும்.

உள்ளே சென்றதும், நான்கு விருப்பங்கள் காட்டப்படலாம், உங்களுக்கான விருப்பத்தைத் தேர்வு செய்யவும். (ISSR) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்த பின்னர், உங்கள் ஆதார் எண் மற்றும் பெயர் பின்வரும் பக்கத்தில் கேட்கப்படும் அதனை உறுதி செய்யவும்.

அப்போது வடிவம் A என தோன்றும். அதனை முழுமையாக நிரப்ப வேண்டும். ஒவ்வொரு ஒவ்வொன்றையும் கவனமாக படித்து நிரப்பவும். அனைத்தையும் முடித்த பிறகு கேப்ட்சாவை கொடுத்துவிட்டால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

45 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

50 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago