தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராத காரணத்தினால், மருத்துவர் ஒருவர் அவரின் உடலை டிராக்டரில் எடுத்து சென்றார்.
தெலுங்கானா மாநிலம், தெனுகுவாடாவைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவர், கொரோனா நோய் தோற்றால் உயிரிழந்தார். அவரின் உடலை அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அதன்காரணமாக, அவரின் உடலை அடக்கத்திற்கு எடுத்து செல்வதற்காக ஒரு டிராக்டர் ஏற்பாடு செய்யுமாறு மருத்துவமனை நிர்வாகம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரியது.
டிராக்டரை மருத்துவமனைக்கு கொண்டு வந்த நகராட்சி ஊழியர், டிராக்டரை தனிமை வார்டுக்கு அருகில் நிறுத்தி, உடலை எடுக்க மறுத்து, அங்கிருந்து வெளியேறினார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகும் யாரும் டிராக்டரை ஓட்ட முன்வராத காரணத்தில், அங்குள்ள மருத்துவர் ஸ்ரீராம், பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து, அந்த டிராக்டரில் உயிரிழந்தவரின் உடலை கொண்டு சென்றார்.
அந்த நபரின் இறுதி சடங்குகள் முடியும் வரை, மருத்துவர் அங்கேயே காத்திருந்தார். மருத்துவரின் இந்த செயலுக்கு மக்கள் பலரும் அவரை பாராட்டினார்கள். மேலும் அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் விடீயோக்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…