மருத்துவர்கள் வரவில்லை! உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை!

Published by
லீனா

உயிரிழந்த 1 வயது குழந்தையை கட்டியணைத்து கதறி அழும் தந்தை.

உத்திர பிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் உள்ள மிஸ்ரிபூர் கிராமத்தில் வசிக்கும் பிரேம்சந்த்,  வயது குழந்தையை  காய்ச்சல் காரணமாக, கண்ணாஜில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்காக அங்குள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு, எந்த மருத்துவர்களும் வராத காரணத்தால் சிகிச்சையளிக்கவில்லை  என்றும், இதனால் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் குழந்தையின் தந்தை  குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்  கூறுகையில், நாங்கள் சுமார் 45 நிமிடங்கள் அங்கே தங்கியிருந்தாலும், எந்த மருத்துவரும் வந்து  பார்க்கவில்லை. கான்பூருக்குச் செல்லும்படி எங்களிடம் கூறப்பட்டது. நான் ஒரு ஏழை; என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்ய முடியும்,” என தெரிவித்துள்ளார்.

கண்ணாஜ் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கிருஷ்ணா ஸ்ரூப் குற்றசாட்டை மறுத்துள்ள நிலையில், இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பிரேம்சந்த், மிஸ்ரிபூரில் வசிப்பவர். தனது மகன் அனுஜை மருத்துவமனையில் அனுமதித்தார். ஒரு குழந்தை நிபுணர் குழந்தைக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் குழந்தை அரை மணி நேர சிகிச்சைக்குப் பிறகு இறந்தது. குழந்தையை அனுமதிக்கவில்லை என்றும், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் சொல்வது தவறு.’ என்று அவர் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

“பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? சவால் விடுத்த சேகர் பாபு.!

சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…

17 minutes ago

ஹார்மூஸ் நீரிணை மூட ஈரான் முடிவு.., உயரும் பெட்ரோல் – டீசல்.? இந்தியாவுக்கு பாதிப்பா.?

ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…

2 hours ago

ஜனநாயகன் கடைசி படமா? “விஜய் கூறியது இதுதான்” – மமிதா பைஜு சொன்னது என்ன.?

அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…

2 hours ago

“ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?” – ட்ரம்ப் கேள்வி.!

வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…

3 hours ago

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

4 hours ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

4 hours ago