இனி கவலை வேண்டாம்.! மொபைல் நெட்ஒர்க்கை 3 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • எம்.என்.பி சேவை முந்தைய கணக்குப்படி ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் இருந்தது.
  • தற்போது எம்.என்.பி சேவை அறிவிப்பின் படி மற்றொரு நெட்வொர்க்கிற்கு இனி 3 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.

தற்போது பல்வேறு சிறப்பம்சங்களுடன் எம்.என்.பி சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எம்.என்.பி சேவை முந்தைய கணக்குப்படி ஒரு நெட்வொர்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாற்ற 15 நாட்கள் கால அவகாசம் ஆகும். இந்நிலையில் தற்போது டிராய் வெளியிட்ட அறிக்கையில், நெட்ஒர்க் சேவையை மாற்றும் விதிகள் எளிதாக்கி இன்று முதல் அமலுக்கு வந்தது. அதாவது மொபைல் சேவை வழங்கும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை இனி 3 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாற்றுவதற்கான வழிமுறை PORT என டைப் செய்து இடைவெளி விட்டு தங்களின் 10 இலக்கு மொபைல் எண்ணை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்து போர்டபிலிட்டியை  மாற்றிக் கொள்ளலாம். இதற்கான கட்டணம் ரூ.6.96 மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பியதும் தங்களுக்கு வரும் மெசேஜை 30 நாட்களுக்குள் எப்போ வேண்டுமானாலும் பயன்படுத்தி நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம்.

இதையடுத்து UPC குறியீட்டு எண் மெசேஜ் மூலம் வழங்கப்படும். பின்னர் அருகில் உள்ள சேவைக்கு சென்று அதனை காண்பித்து அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். கட்டணம் மற்றும் ஆதாரம் போன்றவற்றை அளித்தால் புதிய சிம் கார்டை நீங்கள் விரும்பும் சேவைக்கு அந்நிறுவனம் உங்களுக்கு வழங்கும். பின்பு அந்த எண்ணானது மூன்று நாட்களில் செயல்படுத்தபடும்.

பின்னர் இடைப்பட்ட காலத்தில் நெட்வொர்க் மாற்றம் விரும்பவில்லை என்றால் CANCEL என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு மெசேஜ் அனுப்பினால் விரைவில் நெட்வொர்க் மாற்றம் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

சிறுமி வன்கொடுமை – வடமாநில இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…

24 minutes ago

பிரதமர் மோடியைச் சந்திக்க இபிஎஸ் திட்டம்.! அனுமதி மறுக்கப்பட்டதால் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்றம்.!

தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…

1 hour ago

நடைபயணத்திற்கு தடை – நீதிமன்றத்தை நாடும் அன்புமணி.!

சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…

2 hours ago

2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை.!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 26, 2025) தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். தற்போது…

2 hours ago

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

12 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

12 hours ago