சுகேஷ் சந்திரசேகர் பரோலை வரும் 12-ம் தேதி வரை நீட்டித்து நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் மற்றும் அவரது நண்பர் ஹவாலா புரோக்கர், மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லி குற்றவியல் போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
மேலும், சுகேஷ் சந்திரசேகர் மீது பல வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி சுகேசின் தாயாருக்கு அறுவை சிகிச்சை செய்வதாக கூறியதால் டெல்லி நீதிமன்றம் அவருக்கு பரோல் வழங்கியது. ஆனால், அறுவை சிகிச்சை வரும் 7-ம் தேதிதான் சென்னையில் செய்யப்படுவதால் பரோல் நீட்டித்து வழங்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம் வரும் 12-ம் தேதி வரை பரோல் நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…