கொரோனா வைரஸ் பரவுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங்,கோமியம் குடிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது அதிவேகமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிகையானது 4 லட்சத்திற்கும் அதிகமாகியுள்ளது.இதனால்,பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் உள்ளிட்ட தடுப்பூசி மருந்துகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,உத்தரபிரதேசத்தின் பைரியாவைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.சுரேந்திர சிங்,கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள விரும்பினால் மக்கள் அனைவரும் பசுவின் கோமியம் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சுரேந்திர சிங் வெளியிட்டுள்ள வீடியோவில்,”தினமும் காலை வெறும் வயிற்றில் பதஞ்சலியின் ‘கவ்முத்ரா’ என்ற பசு மாட்டின் கோமியத்தை தண்ணீரில் கலந்து இரண்டு அல்லது மூன்று டம்ளர் குடிக்க வேண்டும்.அதன்பின்னர் 30 நிமிடங்களுக்கு வேறு எதையும் உட்கொள்ள வேண்டாம்.இதனால்,கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல்,இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பசுவின் கோமியம் ஒரு சிறந்த நிவாரணி”,என்று கூறினார்.
இதனையடுத்து,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…