ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோன்..! சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்…!

Published by
லீனா

ஜம்மு – காஷ்மீரில் வெடி பொருள்களுடன் பறந்த ட்ரோனை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்.

ஜம்மு – காஷ்மீரில் சமீப நாட்களாக ட்ரோன்கள் பறப்பது வழக்கமாகி உள்ளது.  ஆனால்,பாதுகாப்பு படையினர் தீவிரமாக செயல்பட்டு, ட்ரோன்களின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

வெடிபொருளுடன் பறந்த ட்ரோன் 

ஜம்மு – காஷ்மீரில்  பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள, கனச்சக் என்ற இடத்தில் வெடிபொருள்களுடன் ஒரு ட்ரோன் பறந்துள்ளது. இந்த ட்ரொனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ட்ரோன் நடமாட்டத்தின் பின்னணி 

சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரொனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், ட்ரோன் நடவடிக்கையின் பின்னணியில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபா (எல்இடி) உள்ளதா என்பதையும், முந்தைய நிகழ்வுகளைப் போலவே பயங்கரவாத தாக்குதலுக்கு இந்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் ட்ரோன்களின் நடமாட்டம் முதல் முறையல்ல. ஏற்கனவே, ஜூன் 27 அன்று ஜம்மு விமான நிலையத்தில் நடந்த ட்ரான் தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அங்கு அடிக்கடி ட்ரோன்களின் நடமாட்டம் காணப்படுகிறது.

டிஜிபி தில்பாக் சிங்கின் உத்தரவு 

ட்ரோன் நடவடிக்கைகளின் மத்தியில், ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் சமீபத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து ட்ரோன்களைப் பயன்படுத்த முயற்சிப்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago