புகை [பிடிப்பவர்கள் சிலர் புகையிலை இருக்கும் சிகெரெட்டை விடுத்து, பேட்டரி மூலம், சார்ஜ் செய்து உபயோகப்படுத்தும் இ-சிகெரெட்டை பயன்படுத்துகின்றனர். இந்த சிகெரெட்டில், நிகோடின் மற்றும், ஒருவித ரசாயன திரவம் நிரப்பப்பட்டிருக்கும். சிகரெட்டை ஆன் செய்தவுடன், சிகெரெட்டினுள் உள்ள திரவம் சூடாகி புகை வெளியே வரும் அதனை சிகெரெட் பிடிப்பவர்கள் உபயோகப்படுத்தும் போது புகை பிடிப்பதுபோல உணர்வை உண்டாக்குகிறது. இதன் மூலம், புற்றுநோய், நாக்கு கறுப்பாக்குதல், ஒவ்வாமை, சுற்றி இருப்பவர்களுக்கும் இதே பாதிப்புகள் வரக்கூடும் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இதன் காரணமாக நேற்று இந்த இ-சிகெரெட்டை பயன்படுத்துவதை தடை விதித்து மத்திய அரசானது அவசர அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணையை அடுத்த வரவுள்ள கூட்டத்தொடரில், பாராளுமன்றத்தில் நிறைவேற்ற உள்ளனர்.
மேலும், இந்த இ-சிகெரெட்டை உபயோகப்படுத்தினால், முதலில் 1 லட்சம் ருபாய் அபராதமும், ஓராண்டு சிறையையும் விதிக்கப்படும் எனவும், அதனை இரண்டாம் முறையும் மீறுபவர்களுக்கு 3 லட்சம் அபராதமும், 3 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விற்ப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…