மிசோரத்தில் கடந்த 9 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 08:02 மணிக்கு மிசோரத்தின் சம்பாய் நகரின் 31 கிலோமீட்டர் தென்மேற்கு பகுதியில் ரிக்டர் அளவில் 4.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இதைத்தொடர்ந்து நேற்று இரவு மற்றொரு நடுக்கம் இரவு 11:03 மணியளவில் மிசோரத்தின் சாம்பாய் நகரின் 70 கி.மீ தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக மிசோரம் நிலநடுக்கத்தையும், நிலச்சரிவுகளையும் சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் 12 மணி நேரத்திற்குள் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா தெரிவித்தார். அதில், மிசோரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 04.16 மணியளவில் ஐஸ்வாலின் கிழக்கு-வடகிழக்கில் 25 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 5.0 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது.
பின்னர், திங்கள்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு தொடர்ந்து இரண்டாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 எனப் பதிவாகியுள்ளது. கடந்த 9 மணி நேரத்தில் நடைபெற்ற 2 நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…
சேலம் : பாமகவில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சி…
சென்னை : சேலம், தருமபுரியில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், அக்கட்சியின்…
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…