Categories: இந்தியா

மீண்டும் டெல்லியில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்..!

Published by
murugan

டெல்லி என்சிஆர் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று மாலை 4:08 மணியளவில் காசியாபாத், நொய்டா உள்ளிட்ட தேசிய தலைநகர் பகுதி முழுவதும் உணரப்பட்டது. அதன் நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. அதன் மையம் ஃபரிதாபாத்திலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் கிழக்கே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர். இதற்கு முன்பும் தலைநகர் டெல்லியில் அக்டோபர் 3-ஆம் தேதி நிலநடுக்கம் உணரப்பட்டது. அப்போது நேபாளத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி என்சிஆர் உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வழங்கிய தகவலின்படி, அக்டோபர் 3 ஆம் தேதி மதியம் 2:20 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து 6.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நேரம் நில அதிர்வு ஏற்பட்டது.

 

Published by
murugan

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago