இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,டீசல் விலை உயர்வின் காரணமாக ஆர்டிசி பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக,ஆந்திர மாநில அரசு சாலை போக்குவரத்து கழக இயக்குநர் துவாரகா திருமலா ராவ்,ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது: “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆந்திரா மாநில அரசுப் பேருந்து கழகம் பல நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது.தினசரி 61 லட்சம் பேர் தங்கள் இடங்களை அடைய அரசுப் பேருந்து உதவுகிறது.ஆனால்,டீசல் விலை ஏறக்குறைய 60 சதவீதம் உயர்ந்து,இரண்டு ஆண்டுகளில் ரூ.5,680 கோடி வருவாய் குறைந்துள்ளது.
எனவே,நஷ்டத்தைத் தாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால்,மாநில பொதுப் போக்குவரத்துக் கழகம்,பல்லே வெளுகு(Palle Velugu) பேருந்துகளுக்கு டீசல் செஸ் 2 ரூபாயும்,எக்ஸ்பிரஸ் சேவை பேருந்துகளுக்கு 5 ரூபாயும்,உயர்நிலை (ஏசி) பேருந்துகளுக்கு 10 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளது.இது முழுக்க முழுக்க டீசல் மீது விதிக்கப்படும் செஸ் கட்டணம் மட்டுமே,மாறாக டிக்கெட்டுக்கானவை அல்ல”, என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…