இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,டீசல் விலை உயர்வின் காரணமாக ஆர்டிசி பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக,ஆந்திர மாநில அரசு சாலை போக்குவரத்து கழக இயக்குநர் துவாரகா திருமலா ராவ்,ஊடகங்களுக்குப் பேட்டியளித்தபோது கூறியதாவது: “கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆந்திரா மாநில அரசுப் பேருந்து கழகம் பல நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டது.தினசரி 61 லட்சம் பேர் தங்கள் இடங்களை அடைய அரசுப் பேருந்து உதவுகிறது.ஆனால்,டீசல் விலை ஏறக்குறைய 60 சதவீதம் உயர்ந்து,இரண்டு ஆண்டுகளில் ரூ.5,680 கோடி வருவாய் குறைந்துள்ளது.
எனவே,நஷ்டத்தைத் தாங்க முடியாத சூழ்நிலையில் இருப்பதால்,மாநில பொதுப் போக்குவரத்துக் கழகம்,பல்லே வெளுகு(Palle Velugu) பேருந்துகளுக்கு டீசல் செஸ் 2 ரூபாயும்,எக்ஸ்பிரஸ் சேவை பேருந்துகளுக்கு 5 ரூபாயும்,உயர்நிலை (ஏசி) பேருந்துகளுக்கு 10 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளது.இது முழுக்க முழுக்க டீசல் மீது விதிக்கப்படும் செஸ் கட்டணம் மட்டுமே,மாறாக டிக்கெட்டுக்கானவை அல்ல”, என்று கூறியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…