Categories: இந்தியா

ED சம்மனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.! அரவிந்த் கெஜ்ரிவால்!

Published by
பாலா கலியமூர்த்தி

அமலாக்கத்துறை சம்மன் சட்டவிரோதமானது, உடனடியாக அதனை வாபஸ் பெற வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவதற்கு முன்பு இவ்வாறு தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தது.

அந்தவகையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் ஆகியோரை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை கடந்த திங்கள் கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.

சட்டவிரோத பணவரிவர்த்தனை.! அமலாக்கத்துறை முன் ஆஜராகும் அரவிந்த் கெஜ்ரிவால்.!

அந்த சம்மன் அடிப்படையில் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜிரிவால் நேரில் ஆஜராக உள்ளார் என கூறப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக உள்ளதால், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்குமுன்பு கெஜ்ரிவால் கூறுகையில், அமலாத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாஜகவின் வேண்டுகோளின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 5 மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்துக்கு செல்லக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனவே, அமலாக்கத்துறை உடனடியாக சம்மனை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவாரா அல்லது தவிர்ப்பாரா என்பது தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல், அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று தெரிய வந்ததாக ஆம் ஆத்மி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

30 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

35 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

58 minutes ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

3 hours ago