ஒரே அறையில் இரு ஜோடிகள்.! நான்கு குழந்தைகள் உட்பட 8 பேர் பலி.! நடந்தது என்ன.?

Published by
பாலா கலியமூர்த்தி
  • கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த15 பேர் கொண்ட குழு விடுமுறை நாட்களில் நேபாளத்தில் உள்ள போகாரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
  • இந்நிலையில், 2 ஜோடிகள் தங்களின் குழந்தைகளுடன் ஒரே அறையில் தங்கியுள்ளனர், அறையில் ஹீட்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறி 8 பேரும் உயிரிழந்தனர்.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த15 பேர் கொண்ட குழு விடுமுறை நாட்களில் நேபாளத்தில் உள்ள போகாரா என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர் சுற்றுலா முடித்துவிட்டு நேபாளத்தின் மக்வான்பூர் மாவட்டத்தில், டாமனில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2500 மீட்டர் உயரத்தில் இருந்தது என கூறப்படுகிறது. அதனால், அங்கு அவர்கள் தங்களை சூடாக வைத்திருக்க, இரவு முழுவதும் கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளார்.

இதனிடையே, விருந்தினர்கள் நான்கு அறைகளை முன்பதிவு செய்ததாக ரிசார்ட்டின் மேலாளர் கூறுகிறார். அதில் 2 ஜோடிகள் தங்களின் குழந்தைகளுடன் ஒரே அறையில் தங்கியுள்ளனர். மீதமுள்ளவர்கள் மற்ற அறைகளில் தங்கியுள்ளனர். பின்னர் அடுத்த நாள் காலை, அந்த அறையில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 8 பேர் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அதனை கண்ட விடுதி ஊழியர்கள் அவர்களை காத்மண்டுவில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அறையில் ஹீட்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாகவும், அறையின் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டி இருந்ததால் மூச்சு திணறி 8 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர்களின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் சடலங்களை விரைவில் கேரளா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை நோபாள சுற்றுலா துறை அமைத்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

1 hour ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

1 hour ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

1 hour ago

ரிஷப் பண்ட்-க்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் – ஐசிசி அதிரடி.!

லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…

2 hours ago

“இந்தியரின் விண்வெளி பயணம் திட்டமிட்டபடி நடைபெறும்” – ஸ்பேஸ் எக்ஸ்.!

அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…

3 hours ago

Ostrava Golden Spike : ஈட்டி எறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நீரஜ் சோப்ரா.!

மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…

3 hours ago