மத்திய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் மின்சாரம் தாக்கி ஒரு குடும்பத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். சத்தர்பூர் மாவட்டம் பிஜாபூர் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மன். இன்று காலை எட்டு மணியளவில் இவர் வீட்டின் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அப்பொழுது வெளிச்சம் குறைவாக இருந்த காரணத்தால் மின்சார விளக்கை பயன்படுத்தியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இந்நிலையில் அவரை காப்பாற்ற அவரது குடும்பத்தினர் 5 பேர் முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சீதாராம் அவஸ்யா எனும் காவல் அதிகாரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…