வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள பொதுமக்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கான தவணையை இப்போதைக்கு செலுத்த தேவையில்லை. கடன் கொடுத்த நிறுவனங்களும் தவணை கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என மத்திய அரசு சலுகை வழங்கியது.
இதையடுத்து, வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை ரத்து செய்ய கோரும் வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கேட்டது. ஆனால் மத்திய அரசு விளக்கம் அளிக்காத நிலையில் பல கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியது.
அதில் மத்திய அரசின் பொது முடக்கும் காரணமாகவே கடன் செலுத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்த ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு இஎம்ஐ அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கலாம் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பாக நாளை முடிவு எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…