கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார்.? 3 மாதங்கள் கடந்தும் இன்னும் திணறும் பாஜக.!

Published by
மணிகண்டன்

கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் 10ஆம் தேதி நடைபெற்று, மே 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக பிரதான கட்சிகள் தனித்தனியாக களமிறங்கின.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. சித்தராமையா கர்நாடக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த முறை ஆட்சியை கைப்பற்றி இருந்த பாஜக 66 இடங்களை வென்று தோல்வி அடைந்து இருந்தது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளை வென்றுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் இரண்டாவதாக அதிக எம்எல்ஏக்களை கொண்டுள்ள பாஜக எதிர்க்கட்சியாக விளங்குகிறது. ஆனால் தற்போது வரை சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. இரண்டாவது பெரிய கட்சியாக உள்ள பாஜக சட்டமன்ற குழு தலைவர் தான் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவார்.

ஆனால், சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் தனி தனி பிரிவாக பாஜக தலைவர்கள் செயல்படுவதால் எதிர்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பாஜக தேசிய தலைமை காலதாமதம் ஏற்படுத்துகிறது. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஒரு பிரிவினரும், பசனகவுடா ஆர் பாட்டீல் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ஒரு பிரிவினரும்  கூறி வருகின்றனர்.

எப்படியும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தான் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட இரு பாஜக தலைவர்களும் லிங்காயத் சமூத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அதே போல, அடுத்து ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்த ஒருவரை பாஜக மாநில தலைவராக தேர்ந்தெடுக்கவும் பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. ஏனென்றால் , எதிர்க்கட்சி தலைவராக லிங்காயத் சமூத்தினரும், கட்சி தலைவராக ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவரும் இருந்தால் இரு பிரிவினருக்கும் சம வாய்ப்பு கொடுத்தார் போல ஆகிவிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதே போல பாஜக மாநில தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதிலும் இன்னும் தெளிவான முடிவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் மத்திய அமைச்சராக உள்ள ஷோபா கரந்த்லாஜே மற்றும் பாஜக எம்எல்ஏ சி.என்.அஸ்வத் நாராயண் ஆகியோரிடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடக மாநில பாஜக தலைவர் யார் என்பதிலும் சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

7 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago