STRIKE [iMAGESOURCE : REPRESENTATIVE]
மகாராஷ்டிராவில் அரசின் திட்டங்களுக்காக அரசு தங்களது நிலத்தை எடுத்துக் கொள்ளும் போது, அதற்கு சரியான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் விவசாயிகள் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இதனை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிரா தலைமை செயலகத்தின் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தடுப்புகளை தகர்த்து, விவசாயிகள் தலைமை செயலகத்திற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டி வந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நுழைந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அமைச்சர் தாதாஜி பூஷே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், சில விவாசாயிகள் தடுப்பு காவலில் வைப்பதற்காக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…