STRIKE [iMAGESOURCE : REPRESENTATIVE]
மகாராஷ்டிராவில் அரசின் திட்டங்களுக்காக அரசு தங்களது நிலத்தை எடுத்துக் கொள்ளும் போது, அதற்கு சரியான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் விவசாயிகள் என தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இதனை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களிடம் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இந்த நிலையில் மகாராஷ்டிரா தலைமை செயலகத்தின் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தடுப்புகளை தகர்த்து, விவசாயிகள் தலைமை செயலகத்திற்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டி வந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நுழைந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டதில் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீசார் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அமைச்சர் தாதாஜி பூஷே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும், சில விவாசாயிகள் தடுப்பு காவலில் வைப்பதற்காக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…