ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, வீட்டில் இருந்து பணிபுரியும் காலவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், சில தளர்வுடன் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்கள் பலரும் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் பிபிஓ நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களை ஜூலை 31 வரை வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதில், ஐ.டி பணியாளர்களில் சுமார் 85% பேர் வீட்டிலிருந்தே பணிபுரிகின்றனர். மேலும் முக்கியமான வேலைகள் இருந்தால் மட்டுமே அவர்கள் அலுவலகங்களுக்குச் செல்கின்றனர். ஆனால் சில நிறுவனங்கள், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மேலும் சில நாட்களுக்கு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இந்தாண்டு இறுதி வரை வீட்டிலிருந்தே பணியாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…