ஓட்டுனர் உரிமம் செல்லுபடிக் காலம் நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு..!

Published by
murugan

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதில், மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடி காலத்தை மீண்டும் நீட்டித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகு ஒருவரின் ஓட்டுநர் உரிமம் அல்லது பிற மோட்டார் வாகன ஆவணம் முன்பே காலாவதியாகி விட்டால், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன கட்டாய ஆவணங்களை செல்லுபடிக் காலம் வருகின்ற மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த வழிகாட்டுதல்களை செயல்படுத்துமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கும், தற்போதுள்ள நிலைமையை மனதில் வைத்துக் கொண்டு இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த ஆவணங்களின் நீட்டிப்பு தொடர்பாக மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 அன்று இதே போன்று நீட்டிக்கப்பட்டது. டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்களின் செல்லுபடிக் காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

9 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago