முகம் முழுவதும் கண்கள், உதடுகள், மூக்குகள் வரைந்த ஒப்பனை கலைஞரின் அட்டகாசமான முயற்சி.
இன்று ஒப்பனை கலைஞர்கள் தங்களது திறமைகளை பயன்படுத்தி பலவிதமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒப்பனை கலைஞர் மிமி சோய் என்பவர் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி, தனது முகம் முழுவதும் கண்கள், லிப்ஸ்டிக் அடிக்கப்பட்ட உதடுகள் மற்றும் மூக்குகளை வரைந்துள்ளார். இதனை பார்க்கும் போது அவரது முகத்தில், உண்மையான கண்கள், மூக்கு, வாய் எங்கு உள்ளது என்றே தெரியவில்லை.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் இது குறித்து அவர் தனது பதிவில் கூறுகையில், இதை செய்து முடிக்க 8 மணி நேரம் ஆனதாகவும், இதனை வரைந்து முடிப்பதற்குள் தான் 3 முறை மயங்கி விழுந்ததாகவும், தலையில் வரையும் போது மயக்கம் மற்றும் குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…