புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், தலைநகர் டெல்லியில் போராட்ட நடத்தி வருகின்றனர். மத்திய அரசிற்கும், விவசாயிகள் அமைப்பிற்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், சுமுகமான முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என உறுதியாக உள்ளனர். இதையடுத்து, தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் நடத்தவுள்ளனர். இதனையடுத்து போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…