டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையில், WWE-ன் பிரபல வீரரான “தி கிரேட் காளி” தனது ஆதரவினை தெரிவித்தார்.
அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 7 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக டெல்லி – நொய்டா எல்லைகள் மூடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மல்யுத்த தொடரான WWE-ன் பிரபல வீரரான “தி கிரேட் காளி” டிக்ரி எல்லையில் நடைபெற்று வந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். இதுகுறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ, தற்பொழுது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…