நேட்டோ உச்சி மாநாட்டிற்குச் சென்ற டிரம்ப்? இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்குமா?

டிரம்ப் நேட்டோ சென்றுள்ள நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர்நிறுத்தம் நீடிக்கும் என்று தெரிகிறது.

donald trump

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு நாடுகளும் நீங்க தான் போர் ஒப்பந்தத்தை மீறினீர்கள் என ஒருவரை ஒருவர் மீறல் செய்ததாக குற்றம்சாட்டினாலும், இப்போது 11-நாட்களுக்கு பிறகு அங்கு நிலைமை கொஞ்சம் அமைதியாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இரு தரப்பையும் கண்டித்து, அமைதியை காக்குமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு அமைதியான சூழல் மெல்ல மெல்ல பழையபடி திரும்பிக்கொண்டு இருக்கிறது.

ஜூன் 24, 2025 அன்று நெதர்லாந்தில் நடக்கும் நேட்டோ உச்சி மாநாட்டுக்கு செல்லும் வழியில், டிரம்ப் தனது Truth Social தளத்தில், “இஸ்ரேலும் ஈரானும் போரை நிறுத்த விரும்பினர்” என்று எழுதினார். ஈரானின் அணு ஆயுதத் தளங்களை இஸ்ரேல் அழித்ததாகவும், அதன் பின் போர் நிறுத்தம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறை, ஈரானின் அணு ஆயுதத் திட்டம் முழுமையாக அழிக்கப்படவில்லை, சில மாதங்களுக்கு மட்டுமே தாமதமாகியிருக்கலாம் என்று தெரிவித்தது.

மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரான் ஒப்பந்தத்தை மீறாவிட்டால் இஸ்ரேல் அதை மதிக்கும் என்று உறுதியளித்தார். அதேபோல், ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்ஸேகியன், இஸ்ரேல் மீறாவிட்டால் ஈரான் ஒப்பந்தத்தை பின்பற்றும் என்று கூறினார். இதையடுத்து, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையமும், ஈரானின் வான்பரப்பும் மீண்டும் திறக்கப்பட்டன, இது நிலைமை சீரடைந்ததற்கு அறிகுறியாக உள்ளது.

இப்படியான சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப், நேட்டோ மாநாட்டில், உறுப்பு நாடுகள் பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளார். தற்போதைய 2% ஜி.டி.பி. செலவுக்கு பதிலாக 5% ஆக உயர்த்துவது குறித்து பேசவிருக்கிறார். இந்த மாநாட்டில் இஸ்ரேல்-ஈரான் மோதல் மற்றும் ஈரானின் அணு ஆயுதத் திட்டம் பற்றியும் விவாதிக்கப்படும். நேட்டோ தலைவர் மார்க் ருட்டே, ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

25-ஆம் தேதி வரை நடைபெறும் மாநாட்டிற்காக அவர் சென்றிருக்கும் நிலையில், இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? என கேள்விகள் எழுந்த நிலையில், இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையமும், ஈரானின் வான்பரப்பும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக போர் நிறுத்தம் தொடரும் என கூறப்படுகிறது.

மேலும், அதே சமயம், 12 நாட்கள் நீடித்த இந்த மோதல், போர் நிறுத்தத்துடன் முடிவடைந்தாலும், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான பகை முழுமையாக தீரவில்லை. இந்த அமைதி நீடிக்க, டிரம்பின் தொடர் முயற்சிகள் முக்கியமாக இருக்கும். மத்திய கிழக்கில் பதற்றம் குறைந்திருந்தாலும், எதிர்காலத்தில் இந்த ஒப்பந்தம் எவ்வளவு உறுதியாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்