போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என பாஜக எம்பி வருண் காந்தி கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி வருண் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மூன்று விவசாயச் சட்டங்களையும் திரும்பப் பெறும் அறிவிப்பை வரவேற்கிறேன். நமது விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு அவர்களது வீடுகளுக்குச் செல்லும் வகையில், MSP மற்றும் விவசாயிகளின் இதர பிரச்னைகளுக்கும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று நான் கோருகிறேன்.
போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்ததாக பிரதமருக்கு வருண் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான முடிவு விரைவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இறந்தவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். லக்கிம்பூர் வன்முறைக் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வருண் காந்தி என கூறினார்.
ஏற்கனவே விவசாயிகள் இயக்கத்திற்கு வருண் காந்தி ஆதரவு அளித்து வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக பலமுறை அறிக்கைகள் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…