ஆயிரம் கிலோ மீன்கள், காய்கறிகள் என மருமகனுக்கு மாமனார் சீர் கொடுத்து அசத்தியுள்ளார்.
தமிழக மக்கள் ஆடி மாதத்தில் மணமகன் வீட்டிற்கு ஆடி சீர் கொடுப்பது வழக்கம். அதேபோல், தெலுங்கு மக்கள் தெலுங்கு மாதமாக இருக்கக்கூடிய ஆஷாதம் மாதத்தில் பொனாலு என்ற விழாவை கொண்டாடுகிறார்கள். இந்த விழாவில் திருமணமான மகளுக்கு சீர் கொடுத்து அனுப்புவது வழக்கம்.
இதேபோன்று ஒருவர் தனது மருமகனுக்கு சீர் கொடுத்து அசத்தியுள்ளார். புதுச்சேரியில் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள ஏனாம் மாவட்டத்தை சேர்ந்த பவன்குமார் என்பருக்கு அவருடைய மாமனார் வெகு விமர்சையாக சீர் அனுப்பியுள்ளார். இவருடைய மாமனார் ராஜமுந்திரியை சேர்ந்த பலராம கிருஷ்ணா.
தங்களது மகள் பிரத்யுஷாவை நன்றாக பார்த்துக்கொள்ளும் காரணத்தால் பலராம கிருஷ்ணா மணமகன் வீட்டுக்கு 1000 கிலோ மீன்கள், 200 கிலோ இறால், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, 250 கிலோ மளிகைப்பொருட்கள், 250 வகையான ஊறுகாய், ஆயிரம் கிலோ காய்கறிகள், 50 வகையான இனிப்புகள் என சீர் அனுப்பியுள்ளார்.
இவை அனைத்தும் வண்டி வண்டியாக எடுத்து செல்லப்பட்டுள்ளது. வெகு விமர்சையாக சீர் வருவதை கண்டு உள்ளூர் வாசிகள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…