இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய வெளியுறவுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஒரு வருட காலங்களாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸின் வீரியத்தையும், இதனால் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கும் வகையில் பல்வேறு நாடுகள் இதற்கான தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிந்து வந்தது. அதில் ஒன்றாக சீரம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா கண்டறிந்துள்ள கோவிஷீல்ட் எனும் கொரோனா தடுப்பூசிக்கு தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் முதலே இந்தியாவில் முன் களப்பணியாளர்கள் மற்றும் மருத்துவகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிற நாடுகளுக்கும் இந்தியா நன்கொடையாக தடுப்பூசிகளை வழங்கி வரும் நிலையி,ல் இந்த மாதம் 2.40 கோடி கொரோனா தடுப்பூசிகளை 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் சவுதி அரேபியா, பிரேசில், மொராக்கோ, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 2.40 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதில் 13 நாடுகளுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட உள்ளதாம்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…