Categories: இந்தியா

பெங்களூருவில் அரசு பெண் அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை..!

Published by
murugan

கர்நாடகாவில் நேற்று 37 வயதான மூத்த பெண் அரசு அதிகாரி ஒருவர் அவரது இல்லத்தில் தொண்டை அறுபட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். உயிரிழந்த பிரதிமா கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இவர் சுப்பிரமணியம்புரா பகுதியில் வசித்து வந்தார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் இன்று காலை 8.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த கொலை நன்கு திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 6 மணி வரை அலுவலகத்தில் இருந்த பிரதிமா இரவு 8 மணிக்கு வீடு திரும்பியதாக போலீசார் தெரிவித்தனர். கார் டிரைவர் அவரை வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். சநேற்று இரவு 8 மணிக்கும், இன்று காலை 8 மணிக்கும் இடையில் தான் இந்த கொலை நடந்திருக்க வேண்டும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் நடைபெற்ற போது பெண் அதிகாரியின் கணவர் வீட்டில் இல்லை. இவர் சிவமோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் இருந்துள்ளார். வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெண் அதிகாரியை கத்தியால் குத்தி கொன்றனர். இந்த கொலையில் சட்டவிரோத சுரங்கத்தொழில் ஈடுபடுபவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்து பெரும் மதிப்பிலான  பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை என கூறப்படுகிறது.

பிரதிமா கடந்த 8 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை. பிரதிமாவின் வீட்டுப் பணிப்பெண், அவரது ஓட்டுநர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஆகியோரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

7 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

7 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago