மகாராஷ்டிர மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரொலி எடப்பள்ளி வனப்பகுதியில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே மோதல் நடைபெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறையின் சி-60பிரிவு காவல்துறையினர் இந்த மோதலில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த எடப்பள்ளி பகுதியில் அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக காவலர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அப்பொழுது அதிகாலை 5.30 மணியளவில் காவல்துறையினருக்கு மாவோயிஸ்டுக்கும் நடந்த துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. சுமார் ஒரு மணிநேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 13 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் 6 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து மாவோயிஸ்டுகளுக்கு தேடப்பட்டு வருவதாக கட்சிரொலி போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…