லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் எதிரொலியாக சமூகவலைதளங்களில் இந்தியர்கள் சீனாவிற்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் போன்ற குரல்கள் மேலோங்கின. இதையடுத்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதாவது, இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது (Country of origin) என்பது குறித்து தெரிவிக்கவேண்டும் என கூறியது. இந்த விதியை ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பின்பற்றுமாறு வர்த்தக அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு கூறியது. இதைத் தொடந்து, இந்த விதியைப் பின்பற்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் சிறிது கால அவகாசம் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், இணையதளத்தில் விற்கப்படும் பொருட்கள் எந்த நாட்டில் தயாரிக்கப்படுகிறது என இ-காமர்ஸ் நிறுவனங்கள் தெரிவிக்காவிட்டால் ரூ .25,000 முதல் 1 லட்சம் வரை அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கக்கூடும் என்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…