காசிப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து.! மீண்டும் காற்று மாசால் மோசமடைந்து வரும் டெல்லி.!

Published by
Ragi

காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் டெல்லியின் காற்று மாசுபாட்டு நிலைமை மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் ஏற்கனவே காற்று மாசு மோசமடைந்து வரும் நிலையில் தற்போது காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு மேலும் காற்று மாசுபாட்டு நிலைமையை மோசமடைய செய்துள்ளது .

இன்று அதிகாலை காசிப்பூர் நிலப்பரப்பு பகுதியில் உள்ள கழிவு மலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது . மலையிலிருந்து தீ புகை எழுந்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர் .ஆனால் தீ அப்பகுதியில் மட்டுமில்லாமல் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை .மேலும் விபத்திற்கான காரணமும் இன்னும் கண்டறியப்படவில்லை .

மேலும் இந்த தீ விபத்து மூலம் கிழக்கு டெல்லி முழுவதும் புகையால் மூழ்கியுள்ளதாகவும் , அப்பகுதியில் உள்ளவர்கள் கண்களில் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சினைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.இதனால் டெல்லியின் தற்போதைய காற்று மாசுபாட்டானது மோசமடைந்து மேலும் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

11 minutes ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

53 minutes ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

1 hour ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

4 hours ago

‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…

4 hours ago

2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வது என மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு.!

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…

5 hours ago