மகாராஷ்டிராவில் தீயாக பரவும் கொரோனா..பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியது.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறைவடைய இருந்த ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மோடி அறிவித்திருந்தார். இதனிடையே கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 414 ஆகவும் உள்ளது. இந்த கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 2,916 ஆக இருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் இன்று மேலும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 3,081 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா கண்டறியப்பட்ட 165 பேரில் 107 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையை 3081 ஆக அதிகரித்துள்ளது என்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 187 ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

21 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago