மீண்டும் துப்பாக்கி சூடு.! ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் பரபரப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே நேற்று அவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
  • இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதில் இரண்டு மர்ம நபர்கள் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே நேற்று அவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. சில தினங்களுக்கு முன்பு அமைதியான நிலையில் போராட்டம் நடைபெற்ற போது மர்ம நபர் உள்ளே புகுந்து  துப்பாக்கி சூடு நடத்தினார். அங்கு சுற்றி போலீஸ் செய்தியாளர்கள் இருந்தும், வானத்தை நோக்கியும், மாணவர்களை நோக்கியும், ஜெய் ஸ்ரீ ராம் என கூச்சலிட்டுக்கொண்டே துப்பாக்கி சூடு நடத்தினார். பின்னர் இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு கல்லூரி மாணவர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து துப்பாக்கியால் சுட்ட நபரை போலீஸ் வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில் உத்ரபிரதேசத்தை சேர்ந்த ராம் பகத் கோபால் என்றும், இவருக்கு 18 வயது என்றும் தெரிவித்தனர். தற்போது இவரை  போலீஸ் காவலில் 14 நாட்கள் வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து 2 நாட்கள் கழித்து மீண்டும் ஜாமியா மிலியா பல்கலை அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் சிஏஏவிற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. சிஏஏவிற்கு எதிராக பெண்கள் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பின்னர் இதை எதிர்க்கும் விதத்தில் இந்துத்துவா இளைஞர் ஒருவர் அங்கு துப்பாக்கி சூடு நடத்தினார். பிறகு இவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதில் இரண்டு மர்ம நபர்கள் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக துப்பாக்கி சூடு நடந்துருகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் இரண்டு நபர்கள் பைக்கில் வந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்து இருந்தார் என்றும் தகவல் வந்துள்ளது. இது தொடார்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படும் இடத்தில், குண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதேபோல் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மாணவர்கள் வெவ்வேறு தகவல்களை அளிப்பதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

3 minutes ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

48 minutes ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

3 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

4 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

4 hours ago