முதலில் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் மத்திய பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கூறுகையில், முதலில் தான் தடுப்பூசி எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றும் முன்னுரிமை குழுக்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாநில மூத்த அதிகாரிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், ‘நான் இப்போது தடுப்பூசி போட மாட்டேன் என்று முடிவு செய்துள்ளேன். முதலில் அது மற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதன்பின் நான் தடுப்பூசியை நான் போட்டுக் கொள்வேன். தடுப்பூசி இயக்கத்திற்கு பாதுகாப்பான முறையில் தயாரிக்கும் படி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர்-ரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கு கோவாக்சின் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் கோவிஷீல்டு, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்துள்ளது.
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…