சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்த ஆண்டு பொதுத் தேர்வை இரு பருவப்பொதுத் தேர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு முதல் பருவத் தேர்வு நவம்பர் – டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் – ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் எனவும் தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதைத்தொடந்து, 10-ஆம் வகுப்பு முதல் பருவத்தேர்வு டிசம்பர் 11-ஆம் தேதி சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பருவத்தேர்வு தொடங்குகிறது.
இந்த தேர்வு டிசம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பருவ தேர்வு நடத்தும் பள்ளிகள் எந்தவிதமான புகாருக்கும் இடம் தராமல் தேர்வை நல்ல முறையில் நடத்த சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…