ஆக்சிஜன் பற்றாக்குறையால் உத்தராகண்ட் மாநிலத்தில் ஐந்து கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

Published by
Rebekal

ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்க்கி மருத்துவமனையில் ஐந்து கொரோனா நோயாளிகள் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். கொரோனாவால் தினமும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக் மறுக்கப்படுவதாலும், பலர் உயிரிழந்து வருகின்றனர்.

தொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரூர்க்கி எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 5 நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்துள்ளனர். இறந்த  நோயாளிகளில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்ததாகவும், மேலும் 4 பேர் ஆக்சிஜன் படுக்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் கலெக்டர் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

8 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

9 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

10 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

10 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

11 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

11 hours ago