மஹாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகத்தின் அறிக்கையில்,”பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்காக தலா ரூ.5 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவுகளையும் அரசு ஏற்கும்” என்று சிஎம்ஓ ஒரு ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,இதுபற்றி உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில்,மாநிலத்தின் ராய்காட் மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் சுமார் 35 பேர் உயிர் இழந்துள்ளதாக தாக்கரே தெரிவித்ததோடு, மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் இருந்து பெய்த கனமழையால் ராய்காட், ரத்னகிரி, பால்கர், தானே, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, தாக்கரே தெற்கு மும்பையில் உள்ள மந்திராலயாவில் (மாநில செயலகம்) உள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரக் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று கொங்கன் மற்றும் மேற்கு மகாராஷ்டிராவில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலைமையைப் பற்றி கேட்டறிந்தார்.
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…