நம் அண்டை மாநிலமான கர்நாடகாவில் தற்போது கொட்டித் தீர்க்கும் கனமழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவழிகின்றன. இதையடுத்து அணைகள் திறப்பால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் 31 மீட்பு முகாம் அமைத்து மீட்பு.
அம்மாநிலத்தின் முக்கிய ஆறுகளான காவேரி, ஹேமாவதி, கபிலா, ஹாரங்கி போன்ற ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அவற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் அணையிலிருந்து 40,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வடக்கு கர்நாடகா மற்றும் மத்திய கர்நாடகாவில் உள்ள பத்ரா, துங்கபத்ரால காடாபிரபா, மலபிரபா அல்மாட்டி அணைகளும் நிரம்பி உள்ளதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. மேலும் உடுப்பி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தேசிய பேரிடர் குழு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், உடுப்பி நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதேபோல் அம்மாவட்டத்தில் ஸ்வர்ணா, சீதாநதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…