சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா கொரோனா காரணமாக உயிரிழந்தார்.
சிபிஐ முன்னாள் தலைவர் ரஞ்சித் சின்ஹா கொரோனா காரணமாக உயிரிழந்தார். 1974 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா இன்று அதிகாலை 4.30 மணியளவில் டெல்லியில் உயிரிழந்தார். ரஞ்சித் சின்ஹா பல்வேறு மூத்த பதவிகளை வகித்தார்.
ரஞ்சித் சிங் 1974-ல் ஐபிஎஸ் அதிகாரியாகவும், சிபிஐ இயக்குநராக வருவதற்கு முன்பு பல முக்கியமான பதவிகளை வகித்திருந்தார். அவர் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐடிபிபி) இயக்குநராக இருந்தார். 22 நவம்பர் 2012 அன்று, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு படையின் தலைவராக இருந்தார். மேலும், பாட்னா மற்றும் டெல்லி சிபிஐ ஆகியவற்றில் மூத்த பதவிகளில் பணியாற்றினார்.
ரஞ்சித் சின்ஹா முதலில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ரஞ்சித் சின்ஹாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…