Categories: இந்தியா

அரசியலிலிருந்து விலகினார் முன்னாள் கால்பந்து வீரர் பாய்ச்சங் பூட்டியா !!

Published by
அகில் R

பாய்ச்சுங் பூட்டியா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பைச்சுங் பூட்டியா தற்போது அரசியலிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார். சிக்கிமில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகுவதாகக் அவர் கூறி இருக்கிறார்.

இவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணை ஜனாதிபதி ஆவார். சமீபத்தில் முடிவடைந்த 2024 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் பாய்ச்சங் பூட்டியா, சிக்கிம் ஜனநாயக முன்னணி (Sikkim Democratic Front-SDF) கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியை அடைந்தார்.

இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 6-வது முறையாக தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் காரணமாகவே தற்போது இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் பேசிய போது,” சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிஎஸ் தமங் மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) ஆகியோருக்கு நான் இப்பொது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடந்து முடிந்த 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் அரசியல் எனக்கு மட்டும் இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே அனைத்து வகையான தேர்தல் அரசியலிலிருந்தும் உடனடியாக விலகுகிறேன்”, என்று கூறினார்.

Published by
அகில் R

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

7 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

8 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

8 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

9 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

9 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

10 hours ago