Bhaichung Bhutia [file image]
பாய்ச்சுங் பூட்டியா: இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பைச்சுங் பூட்டியா தற்போது அரசியலிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறார். சிக்கிமில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகுவதாகக் அவர் கூறி இருக்கிறார்.
இவர் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணை ஜனாதிபதி ஆவார். சமீபத்தில் முடிவடைந்த 2024 ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலில் பாய்ச்சங் பூட்டியா, சிக்கிம் ஜனநாயக முன்னணி (Sikkim Democratic Front-SDF) கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியை அடைந்தார்.
இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 6-வது முறையாக தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோல்வியின் காரணமாகவே தற்போது இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசிய போது,” சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிஎஸ் தமங் மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) ஆகியோருக்கு நான் இப்பொது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த 2024 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தேர்தல் அரசியல் எனக்கு மட்டும் இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். எனவே அனைத்து வகையான தேர்தல் அரசியலிலிருந்தும் உடனடியாக விலகுகிறேன்”, என்று கூறினார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…