நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சருக்கு 3 ஆண்டு சிறை..!

Published by
murugan

1999 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய்.  ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக  திலீப் ராய்  குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த வழக்கில், திலீப் உடன்  4 பேர் அக்டோபர் 6 ஆம் தேதி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டனர். அக்டோபர் 14 ஆம் தேதி, சிபிஐ வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர் குற்றம் சாட்டப்பட்டவரின் வயதுக்காக தண்டனை குறைக்க  வேண்டும் என விவாதம் நடைபெற்றது.

இதைக்கேட்ட  சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரத் பராஷர், இரு தரப்பினரையும் கருத்தை கேட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  உத்தரவிட்டார். அதன்படி, இன்று திலீப் உடன் 4 பேர் குற்றவாளிகள் ஆஜரான நிலையில்,  சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் திலீப் ராயிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும்,  ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ .25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல், முன்னாள் சுரங்க செயலாளர் எச்.சி.குப்தாவும் மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Published by
murugan
Tags: DilipRay

Recent Posts

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

44 minutes ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

2 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

2 hours ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

3 hours ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

3 hours ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

6 hours ago