Categories: இந்தியா

அக்.21ல் ககன்யான் சோதனை ஓட்டம் – இஸ்ரோ அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம்  வரும் 21ம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வரும் 21ம்  தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. ககன்யான் திட்டத்தின் இந்த புதிய அறிவிப்பை இஸ்ரோ தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, நிலவில் சந்திரயான், சூரியனுக்கு ஆதித்யா என பல்வேறு சாதனைகளை இந்தியா புரிந்து வரும் நிலையில், தற்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ககன்யான் திட்டத்தின் கீழ் 3 வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர்.

அவர்களை பூமியில் இருந்து 400 கி.மீ தொலைவில் பூமியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டு, மூன்று நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்வர். இந்த ஆய்வை முடித்த பிறகு வங்காள விரிகுடா அல்லது அரபிக்கடலில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் மனித பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் அதை உறுதி செய்ய, பொறியியல் அமைப்புகள் மற்றும் மனித மைய அமைப்புகளை உள்ளடக்கிய பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் ஆனது எல்விஎம்3 – எச்எல்விஎம்3 (LVM3 – HLVM3) ராக்கெட் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது. எல்விஎம்3 ராக்கெட் திட நிலை, திரவ நிலை மற்றும் கிரையோஜெனிக் என மூன்று நிலையைக் கொண்டுள்ளது. இதில் எச்எல்விஎம்3 ஆனது சுற்றுப்பாதை தொகுதியை 400 கிமீ தொலைவில் உள்ள குறைந்த பூமி சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்கள் பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் உடல் தகுதி பயிற்சி, சிமுலேட்டர் பயிற்சி மற்றும் ககன்யான் திட்டம் சார்ந்த பயிற்சி பெற்று வருகின்றனர். ககன்யான் திட்ட என்ஜின் சோதனையும் சமீபத்தில் நடைபெற்றது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இன்ஜின் சோதனையும் வெற்றி பெற்றது.

இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின்களின் சோதனை, தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம்  வரும் 21ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!

டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…

25 minutes ago

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

2 hours ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

3 hours ago